Thursday 31 December 2020

வாழ்த்துகள்


 காமாட்சியின் ஆதரவு   அன்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2021   வரவேற்று  வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அன்புடன் காமாட்சி

                  இனிய  புத்தாண்டு வாழ்த்துகள்.

Saturday 28 November 2020

அண்ணாமலை தீபத்திருநாள்


அளவில்லாத அகல் விளக்குகளை ஏற்றி,  அண்ணாமலையாரை மனதில் நினைத்து, உலகமுழுவதையும்  கொரோனா என்ற அரக்கன் பிடியிலிருந்து  விடுவித்து,  பயமற்ற  வாழ்வைக் கொடுக்க வேண்டுவோம்.   அன்புடன் 

நாளை 29 நவம்பர்   அண்ணாமலை தீபம். வாழ்த்துகள் யாவருக்கும்.

Saturday 21 November 2020

திருவண்ணாமலை


 

மலையையே தெய்வமாக வணங்கும் உன்னத மலை இது

பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித்தலமாக விளங்குவது இது.

திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகக் கூறப் படுகிறது.

வினையை நீக்கும் உருவில் திருவண்ணாமலை உள்ளது.

திருவண்ணாமலை  கார்த்திகை தீபத்திற்கு நிகராக எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. 

திருக்கார்த்திகை தினத்தன்று மலையில் ஏற்றப்படும் தீபத்தை ஒரு முறை தரிசித்தாலே இருபத்தியோரு தலை முறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

.திருவண்ணாமலை ஈசனை மனதில் நினைத்தாலே,முக்தி கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது. 

அருணாசலேசுவரரையும்,அபீத குசாம்பாளையும் வணங்கி திருவண்ணாமலை தீபத்தை மனதாரக் கண்டு மகிழுவோம்.

கொரானோ காலமாதலால்  இருக்கும் இடத்திலேயே மனதால் நினைத்து மகிழ ஒரு சில விஷயங்களுடன் இந்தக் கட்டுரை. 

விஷயங்கள் யாவும் வாட்ஸ்அப்பில்  எனக்கு வந்தவைகளில் சிலதுதான் இவைகள். 

29--11---2020   ஞாயிற்றுக் கிழமையன்று கார்த்திகை தீபம்.


அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும்  அருள்புரிய வேண்டுவோம்.

அண்ணாமலைக்கு அரோஹரா என்பதே இவ்விடத்திய வேண்டுதல் கோஷம்.



Friday 13 November 2020

வாழ்த்துகள்


யாவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஆரோக்கியமான தீபாவளியாக இருக்கட்டும்   எப்படி இடுகை இடுவதென்பதே மாறி இருப்பதாகத்தோன்றுகிறது.   எதுவாக இருந்தாலும் ஸரி. முயற்சிப்போம்.

ஆசிகளையும் அன்பையும்தானே சொல்லப் போகிறோம். ஆதலால் உங்கள் யாவர் குடும்பத்தின் அனைவருக்கும் என் மனமார்ந்த 14---11--2020 தின தீபாவளி    ஆசிகளும் அன்பும்.     பதிவிற்கு வந்து உங்கள்யாவரையும் பார்த்தே வெகுகாலமாகிரது.  பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? நாளை குழந்தைகள் தினமும் சேர்ந்து வருகிறது.   

முன்னதாகவே  இனிய தீபாவளி வாழ்த்துகள்   அன்புடன் காமாட்சி




Saturday 13 April 2019

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


 அன்புள்ள  நண்பர்கள் யாவருக்கும்   14---4---2019  தமிழ்ப் புத்தாண்டு
 நல் வாழ்த்துகளை காமாட்சி  அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 காமாட்சி மஹாலிங்கம்.


Monday 14 January 2019

பொங்கலோ பொங்கல். வாழ்த்துகள்

காமாட்சியின்   ஆதரவாளர்கள், மற்றும் யாவருக்கும்,  மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகளையும்,ஆசீர்வாதங்களையும்  இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                            பொங்கலோ பொங்கல்.
ஸகோதரிகள் யாவருக்கும்  கனுப்பொங்கல்    ஆசிகளும்,மங்கலப் பொருட்களும்.
                                            அன்புடன் காமாட்சி
                                       Happy pongal    15   --1---2019
படம் உதவி கூகல்.

Wednesday 2 January 2019

ஆலு போஸ்தா






பெயரைப் பார்த்ததுமே  புரிந்திருக்கும்.   வங்காளத்தவர்களின்  தயாரிப்பு முறை இது.

 நவராத்திரிக்கு முன்பு  தில்லியிலிருக்கும்போது   நாட்டுப்பெண்ணின்  சிநேகிதி   இதைக் கொண்டு வந்திருந்தாள்.    நான் பாரக்பூரிலிருந்தபோது   எப்போதோ   சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. சுமார் அறுபது வருடங்கள் ஆகியிருக்கும். அந்த தயாரிப்பே   ஞாபகத்தில் இருந்ததில்லை.

ஸரி காமாட்சிக்காவது எழுதியனுப்பலாம் என்று குறிப்புகள்   கேட்டேன்.  படங்களும் அவள் கொடுத்ததுதான்.     என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை.   மிக்க சுலபமானமுறை.

பாருங்கள் பிடித்தால் செய்து பாருங்கள். வங்க மொழியில் கசகசாவின் பெயர் போஸ்தா.  ஆலு உருளைக்கிழங்கின் பெயர்.
பாஞ்ச் புரண் என்று சொல்லுவார்கள்.  அது அவர்களின்   சமையலில் முக்கிய  இடம் வகிக்கும்  பொருட்கள்.    கசகசாவும் ,   சேர்த்து  மிகவும் எளிய முறையில் தயார் செய்த    சின்ன உருளைக்கிழங்கின்   கலவைதானிது.   சாதத்துடன் சாப்பிடவே வங்காளத்தவர்களும் விரும்புவார்கள்.  ரொட்டி,பூரி,ஏன் தோசையுடனும் சாப்பிடலாமே! குட்டி உருளைக்கிழங்கில்   முன்பு  நான் சொல்லுகிறேனில் எழுதிய  ஆலுதாம் ஞாபகம் வந்தது.

ஸரி தயாரிக்கும் முறையை   பார்க்கலாமா?

வேண்டியவைகள்.
சின்ன உருளைக் கிழங்கு---கால்கிலோ. சற்று அதிகமாகவும் போடலாம்.
பெரிய வெங்காயம்----மூன்று.
மிளகாய் வற்றல்---மூன்று
கசகசா---மூன்று டேபிள் ஸ்பூன்
 ருசிக்கு---உப்பு
நிறத்திற்கு  ---மஞ்சப் பொடி சிறிது
 வதக்க,பொரிக்க   வேண்டிய அளவு   எண்ணெய்.

பாஞ்ச் புரண் எனப்படுவது  ஒன்றும் பிரமாதமான ஸாமானில்லை.
கடுகு,வெந்தயம், சீரகம்,பெருஞ்சீரகம், ஓமம் ஆக ஐந்து ஸாமான்களே.! வகைக்கு   அரைஸ்பூன்  தாளித்துக் கொட்டப் போதுமானது. இவற்றுடன் ஒரு பிரிஞ்ஜி இலை என்ற தேஜ் பத்தாவும் போட்டிருந்தனர்.

கசகசாவைச் சிறிது  தண்ணீரில் ஊரவைக்கவும்.    உருளைக்கிழங்கை நீங்கள் வழக்கமாக வேக வைக்கும் முறையில்   முக்கா ல்பங்கு வெந்த பதத்தில் தண்ணீரில் வேகவைத்து வடிக்கட்டி,  தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த கசகசாவை மிக்ஸியின் சின்ன கன்டெய்னரில் போட்டு திட்டமானதண்ணீருடன் அறைத்துக் கொள்ளவும்.




வெங்காயத்தையும் பொடிப்பொடியாக  நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வெந்த உருளைக்கிழங்கைப் பொரித்து எடுத்து வைக்கவும்.


எண்ணெய்  அதிகம்  வேண்டாதோர்   சிவக்க உருளையை வதக்கியும் சேர்க்கலாம்.


அடிகனமான   வாணலியில்    இரண்டு,மூன்று  டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, முதலில் பிரிஞ்சி இலையையும் அடுத்து கடுகை வெடிக்கவிட்டு  மிளகாய் மற்றும்   தாளிக்கக்  கொடுத்த ஸாமான்களைச் சேர்த்து மிதமான தீயில்  வறுத்து நறுக்கிய வெங்காயத்தையும்  சேர்த்து வதக்கவும்.

                                     வெங்காயம் வதங்கியதும்,  பொரித்து வைத்துள்ள  உருளைக் கிழங்குகள்,  உப்பு, மஞ்சப் பொடி  சேர்க்கவும்.
                 
                             
இங்கு போட்டிருக்கும் படத்தைவிட   உருளைக் கிழங்கு சிவக்க வேண்டும். இது வதங்கும் உருளைக்கிழங்குதான்.  எண்ணெய்  வேண்டிய அளவு விட்டு  வதக்கவும்.
     நன்றாகச் சிவக்க வதங்கிய பிறகு   அரைத்து வைத்துள்ள  கசகசாவைச் சிறிது தண்ணீர்  விட்டுக் கரைத்துச் சேர்த்துக்  கொதிக்க வைக்கவும்.

யாவும்கலந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து   எதனுடன் சாப்பிட இஷ்டமோ அப்படிச் சாப்பிடவும்.
                                      தாளிப்பும் முதலிலேயே ஆகி விடுகிறது.  வேறு எதுவும் போட அவசியமில்லையாம். இரவல் குறிப்பும் படங்களும்! ரஸிக்க முடிகிறதா
பாருங்கள்.
பின் குறிப்பு-------தாளித்துக் கொட்டுவதில்  ஓமத்தை நீக்கி விட்டு  கருஞ்சீரகத்தைச்  சேர்க்கவும்.   உடம்பிற்கு மிகவும் நல்லது கருஞ்சீரகம். உதவி கீதாரெங்கன்.